Sunday, January 25, 2009

நாம் முறமா சல்லடையா ???

முறமும் சல்லடையும் ஒரே வேலை தான் செய்கின்றன
இரண்டும் நல்லவையையும் கெட்டவயையும் பிரிக்க உதவுகின்றன
ஆனால்
முறம் நல்லவையை வைத்துக்கொண்டு
தீயவைகளை விட்டுவிடுகிறது
சல்லடையோ தீயவைகளை வைத்துக்கொண்டு
நல்லவைகளை விட்டுவிடுகிறது
நாம் யார் ???

Source - Leoni pattimandram

Wednesday, January 7, 2009

வாழ்க இந்தியா !!!

அமெரிக்காவில் காலடி பட்டது
கண்கள் அகல விரிந்தது
நாம் இரண்டாய் போய் விட்டோமே
நான்காக இருந்திருக்க கூடாத என நினைத்தது !!

அழகு எங்கு பார்த்தாலும் அழகு
சாலையில் ஓடும் கார் முதல்
மாலையில் நடக்கும் நாய் வரை அழகு !!

சுத்தமான காற்றை சுவாசிக்கிறேன்
என்றது நாசி !

சுகாதரமான உணவை உன்னுகிறேன்
என்றது வயிர் !

இப்பொழுதெல்லாம் என் மேல் தூசியே படுவதில்லை
என்றது கால்கள் !

கணினியை முத்தமிடும் சுகமே சுகம்
என்றது கைகள் !

எதை பார்த்தாலும் பார்த்த உடனே ஆ
என்றது வாய் !

அரிசியை மறந்த நாக்கு
சிக்கெனுக்கும் சீஷுக்கும் அலைந்தது !

செந்தமிழா அப்படி என்றால் என்ன
என்றது செவி !

ஒவ்வொரு மாதம் முதல் தேதியும்
ராமானுஜ கணக்குகள் போட்ட மூளை
உன் கனவுகள் நிறைவேற போகிறது என்றது

உடல் சிலிர்த்தது
உள்ளம் சிரித்தது
மாயை கண்டு மயங்கியர்வர்கள்
மாண்டு போகும் வரை
தாய் நாடு தழைக்காது என்றது

கதாநாயகனை போல் என்னால்
உடனே ஊருக்கு புறப்பட முடியவில்லை
மனசாட்சியை ஊமை ஆக்க
முடியவில்லை
என்னை செவிடு ஆக்கி கொண்டு
இன்னும் அமெரிக்காவில் இருக்கிறேன் :((((
இந்தியா வாழ்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் !!!

வாழ்க இந்தியா !!!